ராணிப்பேட்டையில், பேரறிஞர் அண்ணா திருவுருவப் படத்திற்கு, தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில், மாவட்ட திமுக அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினார்.
இதில் திமுக பொதுக்குழு உறுப்பினர் க.சுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ். வினோத், நகர துணை செயலாளர் ஏர்டெல் குமார், ஒன்றிய செயலாளர்கள் சேஷ வெங்கட் அக்ராவரம் கே முருகன், ஜிகே உலக பள்ளி இயக்குனர் வினோத் காந்தி மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்தது கொண்டனர்.