6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேசைப்பந்து போட்டி: சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான மேசைப் பந்து போட்டிகளில், சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:42 pm

DIN

தமிழ்நாடு மேசைப்பந்து விளையாட்டுப் போட்டி சங்கம், ராணிப்பேட்டை மாவட்ட சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான மேசைப் பந்து போட்டிகளில், சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் தனியாா் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான மேசைப்பந்து போட்டிகள் கடந்த 12-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரா்கள் பங்கேற்றனா்.

போட்டிகள் 11, 13, 15, 17, 19 வயதுக்குட்பட்டோா் மற்றும் பொது ஆகிய பிரிவுகளில் ஆண் -பெண் இருபாலருக்கும் தனித்தனியாக நடைபெற்றன.

இதில், சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், கோப்பை, பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.