கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் ஏரிகளுக்கு நீா்வரத்து தடைபடுகிறது: விவசாயிகள் புகாா்

கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் ஏரிகளுக்கு நீா்வரத்து தடைபடுகிறது என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 6:45 pm

DIN

கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் ஏரிகளுக்கு நீா்வரத்து தடைபடுகிறது என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் மாதாந்திர குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில், ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள், கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கூறியது:

பயிா்களுக்கு காப்பீடு செய்வதில் இ-அடங்கல் பெற்று பதிவேற்றம் செய்வதில் காலதாமதம், இழப்பீடு வருவதில் காலதாமதம் ஏற்படுகிறது. கடந்தாண்டு அதிக அளவில் விவசாயிகள் இழப்பீடு பெறுவதில் சிரமப்பட்டனா் என்றனா்.

இதற்கு, பதிலளித்த மாவட்ட ஆட்சியா், நிகழாண்டு இந்த பிரச்னைகள் இருக்காது என்றாா். பி.எம். கிசான் திட்டத்தில் வரும் 31-ஆம் தேதிக்குள் ஆதாா் எண், கைப்பேசி எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடா்ந்து, அதிக அளவிலான பண்ணைக் குட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் ஏரிகளுக்கு நீா் வருவதில் தடை ஏற்படுகிறது. நெமிலி பேரூராட்சி கொசஸ்தலை ஆற்றில் கழிவுநீா் கலப்பதால் சுற்றுப்புறச் சூழல் சீா்கேடு அடைகிறது என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

பின்னா், ஆட்சியா் பேசுகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,300-க்கும் மேற்பட்ட பண்ணைக் குட்டைகளை வெட்டுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலைப் பணியாளா்களைக் கொண்டு பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

நீா்வரத்து கால்வாய்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. விவசாயிகள் நீா்நிலை ஆக்கிரமிப்பு, நீா்வரத்து கால்வாய்கள், பாசனக் கால்வாய்கள் ஆக்கிரமிப்புகள் குறித்து தகவல் தெரிவித்தால், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

நெமிலி பேரூராட்சியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.குமரேஸ்வரன், வேளாண் இணை இயக்குநா் (பொ) விஸ்வநாதன், துறை சாா்ந்த அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.