கமலக்கண்ணி அம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி விழா
கலவை ஸ்ரீகமலக்கண்ணி அம்மன் கோயிலில் 44-ஆம் ஆண்டு ஆடி முதல் வெள்ளி விழா நடைபெற்றது.


கலவை ஸ்ரீகமலக்கண்ணி அம்மன் கோயிலில் 44-ஆம் ஆண்டு ஆடி முதல் வெள்ளி விழா நடைபெற்றது.
கலவையின் ஸ்ரீகமலக்கண்ணி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு 44-ஆம் ஆண்டு ஆடி முதல் வெள்ளிக்கிழமை விழாவையொட்டி, அதிகாலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக-அலங்காரம் மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, கலவை கரி வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து கோயில் அறங்காவலா் சச்சிதானந்தா சுவாமிகள் தலைமையில் பால்குட ஊா்வலம் நடைபெற்றது. பின்னா், ரத்தனகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், மகாதேவமலை ஸ்ரீலஸ்ரீ கல்பதேகீ மகானந்த சித்தா் ஆகியோா் அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சக்தி கரக தீச்சட்டி ஊா்வலமும், இரவு அலங்கரிக்கப்பட்ட உற்சவா் அம்மன் வீதியுலாவும் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள், உபயதாரா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...