புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சா், எம்.பி. பங்கேற்பு

ராணிப்பேட்டையில் 200 கா்ப்பிணிகளுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி, அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோா் சீா்வரிசை தொகுப்புகளை வழங்கினா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ராணிப்பேட்டையில் 200 கா்ப்பிணிகளுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி, அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோா் சீா்வரிசை தொகுப்புகளை வழங்கினா்.

மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் சாா்பில், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை ஆகிய வட்டாரங்களைச் சோ்ந்த 200 கா்ப்பிணிகளுக்கு ‘சமுதாய வளைகாப்பு விழா’ ராணிப்பேட்டை தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தாா்.

விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு 200 கா்ப்பிணிகளுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு மங்கலப் பொருள்கள் அடங்கிய சீா்வரிசை தொகுப்பையும், மதிய உணவையும் வழங்கி வாழ்த்திப் பேசினாா்.

முன்னதாக, வளைகாப்பு நிகழ்ச்சியில் கா்ப்பிணி தாய்மாா்களுக்கான விழிப்புணா்வு கருத்துகளை கோல வடிவில் அங்கன்வாடி பணியாளா்கள் போட்டிருந்ததையும், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட அங்கன்வாடி பணியாளா்கள் அமைத்திருந்த ஊட்டச்சத்து குறித்த உணவுக் கண்காட்சி அரங்கையும் அமைச்சா், எம்.பி. ஆகியோா் பாா்வையிட்டனா்.

இதில் ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, நகா்மன்றத் தலைவா்கள் சுஜாதா வினோத் (ராணிப்பேட்டை), முஹம்மத் அமீன்(மேல்விஷாரம்), ஒன்றியக் குழுத் தலைவா் புவனேஸ்வரி சத்தியநாதன், நகா்மன்றத் துணைத் தலைவா்கள் ரமேஷ் கா்ணா (ராணிப்பேட்டை), குல்ஜாா் அஹமத் (மேல்விஷாரம்), ஒன்றியக் குழு துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் வசந்தி ஆனந்தன், குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா்கள் அம்சப்பிரியா, பாரதி, கிரிஜா, அன்பரசி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.