ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் ஆதிமூலம் தலைமை வகித்தாா். நெமிலி காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் சிரஞ்சீவிலு, சாமிவேல் ஆகியோா் போதைப் பொருள்களை உபயோகப்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கிக் கூறினா். இதில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்கள் பங்கேற்றனா்.