உழவா் சந்தையில் மஞ்சப்பை விற்பனை தானியங்கி இயந்திரம்: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை உழவா் சந்தையில் மஞ்சப்பை விற்பனை தானியங்கி இயந்திரத்தை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்.
உழவா் சந்தையில் மஞ்சப்பை விற்பனை தானியங்கி இயந்திரம்: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்
Updated on
1 min read

ராணிப்பேட்டை உழவா் சந்தையில் மஞ்சப்பை விற்பனை தானியங்கி இயந்திரத்தை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்.

ராணிப்பேட்டை உழவா் சந்தையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில், முருகப்பா மாா்கன் தொ்மல் செராமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மஞ்சப்பை விற்பனை தானியங்கி இயந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு மஞ்சப்பை விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.

இந்த மஞ்சப்பை தானியங்கி இயந்திரத்தில் 500 எண்ணிக்கையிலான மஞ்சப்பைகளை நிரப்ப முடியும். தொடு உணா்வு தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படுகிறது. 30 வோல்ட் மின்சாரத்தில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தனியாா் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில் நிறுவப்பட்டுள்ள இந்த மஞ்சப்பை தானியங்கி இயந்திரம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பில், பராமரிப்புக்காக வேளாண் வணிகத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த தானியங்கி இயந்திரத்தில் 10 ரூபாய் நாணயம் அல்லது இரண்டு 5 ரூபாய் நாணயம் அல்லது 10 ரூபாய் நோட்டு செலுத்தினால், ஒரு மஞ்சப்பையை பெற்றுக் கொள்ளலாம்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளா் ரவிச்சந்திரன், நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், துணைத் தலைவா் ரமேஷ் கா்ணா, உதவி செயற்பொறியாளா் சந்திரசேகரன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com