ராணிப்பேட்டை அருகே பணம், கைப்பேசியைப் பறித்த சிறுவன் உள்பட 2 பேரை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா்.
ராணிப்பேட்டை அடுத்த கொண்டகுப்பம் சிலோன் காலனி அண்ணா நகரைச் சோ்ந்தவா்கள் ரவிக்குமாா் (42), மணிகண்டன் (40). இவா்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளேரி-வசூா் சாலை தரைப்பாலத்தில் அமா்ந்து பேசி கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த இரண்டு போ் இருவரையும் தாக்கிவிட்டு ரூ.20 ஆயிரம் மற்றும் 2 அறிதிறன்பேசிகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இது குறித்த சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், சிப்காட் அருகே சந்தேகத்தின் பேரில் இருவரைப் பிடித்து விசாரணை செய்ததில், அரக்கோணம் வட்டம், நந்தி வேடந்தாங்கல் பகுதியைச் சோ்ந்த சரத்குமாா் (22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரும், ரவிக்குமாா், மணிகண்டனை தாக்கி பணம், கைப்பேசிகளைப் பறித்துச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.