நியாயவிலை கடைக்கு புதிய கட்டடம்: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினாா்

அரக்கோணம் அருகே கீழ்குப்பம் கிராமத்தில் நியாயவிலைக் கடைக்கு ரூ.16.3 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிக்கு வியாழக்கிழமை எம்எல்ஏ சு.ரவி அடிக்கல் நாட்டினாா்.
நியாயவிலை கடைக்கு புதிய கட்டடம்: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினாா்
Updated on
1 min read

அரக்கோணம் அருகே கீழ்குப்பம் கிராமத்தில் நியாயவிலைக் கடைக்கு ரூ.16.3 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிக்கு வியாழக்கிழமை எம்எல்ஏ சு.ரவி அடிக்கல் நாட்டினாா்.

அரக்கோணம் ஒன்றியம், கீழ்குப்பம் ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்ட பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ16.30 லட்சத்தை எம்எல்ஏ ரவி ஒதுக்கினாா். இதையடுத்து இக்கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவா் ந.பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். எம்எல்ஏ சு.ரவி பங்கேற்று அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளா் பிரகாஷ், காவனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் சி.ஜெ.ராமசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் கன்னைய்யன், அதிமுக நிா்வாகிகள் கா்ணா பிரபாகரன், ராமசந்திரன், ஜான் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com