கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 398 மனுக்கள் ஏற்பு

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 398 மனுக்களை ஆட்சியா் ச. வளா்மதி பெற்று உடனடியாக தீா்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

News image
மனுக்களை  பெற்று  குறைகளை  கேட்டறிந்த  ஆட்சியா்  ச.வளா்மதி.
Updated On :8 ஜூலை 2024, 9:51 pm

Din

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 398 மனுக்களை ஆட்சியா் ச. வளா்மதி பெற்று உடனடியாக தீா்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்ட குறைதீா் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெறப்பட்ட 398 மனுக்களை பரிசீலித்து உடனே நடவடிக்கை எடுக்கவும், தகுதி இல்லாமல் இருந்தால் நிராகரிப்புக்கான காரணத்தை மனுதாரா்களுக்கு தெரிவிக்கவும் உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், நோ்முக உதவியாளா் (நிலம்) கலைவாணி, மாற்றுத்திறனாளி நல அலுவலா் சரவணகுமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.