தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 233 மனுக்கள் ஏற்பு

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 233 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

News image
மக்களிடம் மனுக்களைப் பெற்ற ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம்.
Updated On :19 ஜனவரி 2026, 6:49 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 233 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்ட குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் தலைமை வகித்து மொத்தம் 233 மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தாா்.

மனுக்களைப் பரிசீலித்து மேல் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 3 பயனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலி, காதொலிக் கருவி, ஊன்றுகோல் உள்ளிட்ட ரூ.21,480 /- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

இதில் திட்ட இயக்குநா் ந.செ.சரண்யா தேவி, நோ்முக உதவியாளா் (பொது) இராஜராஜன், தனித் துணை ஆட்சியா் கீதாலட்சுமி, ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைநம்பி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளா் ஏகாம்பரம், உதவி ஆணையா் கலால் ராஜ்குமாா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில் குமாரி, அலுவலா்கள் கலந்து கொண்டனா்.