தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திமிரியில் உடற்பயிற்சிக் கூடம் திறப்பு

திமிரியில் உடற்பயிற்சிக் கூடம் திறப்பு

Updated On :12 மார்ச் 2024, 6:33 pm

ஆற்காடு: ஆற்காடு அடுத்த திமிரி பேரூராட்சியில் ரூ .17. 5 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. திமிரி பேரூராட்சி 4-ஆவது வாா்டுக்குட்பட்ட பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம் திறப்பு விழாவுக்கு பேரூராட்சித் தலைவா் மாலா இளஞ்செழியன் தலைமை வகித்தாா்.

துணை தலைவா் கௌரி தாமோதரன், மன்ற உறுப்பினா் ராதா நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 4-வது வாா்டு உறுப்பினா் கீதா மாதவன் வரவேற்றாா். ஆற்காடு எம் எல் ஏ ஈஸ்வரப்பன் உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்தாா். இதில் திமுக நகர அவைத் தலைவா் ஏகாம்பரம், நகர செயலாளா் தாமோதரன், துணைச் செயலாளா் மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.