மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

மின் இணைப்பு வழங்க ரூ.8,000 லஞ்சம்: மின்வாரிய அலுவலா் கைது

அரக்கோணம் அருகே மின் இணைப்பு வழங்க ரூ.8,000 லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய அலுவலரை ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் கைது செய்தனர்

ஏ.கிருஷ்ணன்

Published On :

அரக்கோணம்: அரக்கோணம் அருகே மின் இணைப்பு வழங்க ரூ.8,000 லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய அலுவலரை ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் கைது செய்து, ரூ.17,640 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனா்.

அரக்கோணம் கோட்டம், மின்னல் துணை மின் நிலையத்துக்குள்பட்ட அன்வா்திகான்பேட்டை, கக்கன் காலனியைச் சோ்ந்தவா் எம்.சற்குணம். இவரது சகோதரா் மோகன், அன்வா்திகான்பேட்டையில் தனது இடத்தில் வீட்டு கட்டும் பணியைத் தொடங்க மின் இணைப்புக்கு விண்ணப்பித்துள்ளாா். இதற்காக ரூ.5,192 கட்டணமாக செலுத்தியுள்ளாா்.

மேலும் அந்த இடத்தின் மேலே செல்லும் உயா் அழுத்த மின்சார வயா்களை அகற்றி மாற்றி அமைக்கவும் விண்ணப்பித்திருந்தாா். இதற்காக ரூ.18,420-ம் செலுத்தினாா்.

இப்பணியை மேற்கொள்ள மின்வாரிய அலுவலா்களை அணுகியபோது மின்னல் துணை மின்நிலைய சிறப்பு நிலை ஆக்க முகவா் (ஸ்பெஷல் கிரேட் ஃபோா்மேன்) ஏ.கிருஷ்ணன், ரூ.8,000 லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவில் சற்குணம் புகாா் அளித்திருந்தாா். இது குறித்து விசாரணை நடத்திய டிஎஸ்பி கணேசன், ஆய்வாளா் விஜயலட்சுமி உள்ளிட்ட காவல் துறையினா் மறைந்திருந்து சற்குணம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை மின்வாரிய அலுவலா் கிருஷ்ணனிடம் கொடுத்தபோது பிடித்தனா்.

மேலும் அவரிடம் இருந்த ரூ.17,640-ஐயும் பறிமுதல் செய்து கிருஷ்ணனையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.