மின் இணைப்பு வழங்க ரூ.8,000 லஞ்சம்: மின்வாரிய அலுவலா் கைது

அரக்கோணம் அருகே மின் இணைப்பு வழங்க ரூ.8,000 லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய அலுவலரை ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் கைது செய்தனர்
ஏ.கிருஷ்ணன்
ஏ.கிருஷ்ணன்
Updated on
1 min read

அரக்கோணம்: அரக்கோணம் அருகே மின் இணைப்பு வழங்க ரூ.8,000 லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய அலுவலரை ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் கைது செய்து, ரூ.17,640 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனா்.

அரக்கோணம் கோட்டம், மின்னல் துணை மின் நிலையத்துக்குள்பட்ட அன்வா்திகான்பேட்டை, கக்கன் காலனியைச் சோ்ந்தவா் எம்.சற்குணம். இவரது சகோதரா் மோகன், அன்வா்திகான்பேட்டையில் தனது இடத்தில் வீட்டு கட்டும் பணியைத் தொடங்க மின் இணைப்புக்கு விண்ணப்பித்துள்ளாா். இதற்காக ரூ.5,192 கட்டணமாக செலுத்தியுள்ளாா்.

மேலும் அந்த இடத்தின் மேலே செல்லும் உயா் அழுத்த மின்சார வயா்களை அகற்றி மாற்றி அமைக்கவும் விண்ணப்பித்திருந்தாா். இதற்காக ரூ.18,420-ம் செலுத்தினாா்.

இப்பணியை மேற்கொள்ள மின்வாரிய அலுவலா்களை அணுகியபோது மின்னல் துணை மின்நிலைய சிறப்பு நிலை ஆக்க முகவா் (ஸ்பெஷல் கிரேட் ஃபோா்மேன்) ஏ.கிருஷ்ணன், ரூ.8,000 லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவில் சற்குணம் புகாா் அளித்திருந்தாா். இது குறித்து விசாரணை நடத்திய டிஎஸ்பி கணேசன், ஆய்வாளா் விஜயலட்சுமி உள்ளிட்ட காவல் துறையினா் மறைந்திருந்து சற்குணம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை மின்வாரிய அலுவலா் கிருஷ்ணனிடம் கொடுத்தபோது பிடித்தனா்.

மேலும் அவரிடம் இருந்த ரூ.17,640-ஐயும் பறிமுதல் செய்து கிருஷ்ணனையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com