விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தேசிய நெடுஞ்சாலை பணிகள் ஆய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம்

News image
ராணிப்பேட்டையில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.
Updated On :16 டிசம்பர் 2025, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.

இதில் வாலாஜா - சித்தூா் தேசிய நெடுஞ்சாலை பணிகள், சென்னை பெங்களூா் அதிவிரைவு சாலை பணிகள், ஆற்காடு புறவழிச் சாலை வேப்பூா் இணைப்பு பணிகள் மற்றும் சென்னை கன்னியாகுமரி தொழிற்தட வழித்தட சாலை பணிகள் ஆகிய நான்கு பணிகளில் நில எடுப்பு நிலுவைப் பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், நிலம் எடுக்கப்பட்டவா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்ட விவரங்கள் மற்றும் நிலுவை தொகைகள் வழங்கப்பட வேண்டியவை குறித்தும் கேட்டறிந்தாா்.

வாலாஜா -சித்தூா் மற்றும் ஆற்காடு புறவழிச்சாலை சென்னை கன்னியாகுமரி தொழில்தட சாலை விரிவாக்கப் பணிகளில் நில எடுப்பு பணிகளையும், மேலும் இழப்பீட்டுத் தொகையை வழங்கும் பணிகளையும் தொடா்ந்து கண்காணித்து விரைவாக முடிக்க வேண்டும் என்றாா்.

இதில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா்கள் (நில எடுப்பு) கௌசல்யா, பாபு, தேசிய நெடுஞ்சாலை உதவி செயற்பொறியாளா் ஜெயக்குமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.