தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மூதாட்டிக்கு மயக்க மருந்து அளித்து நகை திருடிய விவசாயி கைது

ஆற்காடு அருகே மூதாட்டிக்கு மயக்க மருந்து அளித்து 6 பவுன் நகைகள் திருடிய விவசாயி கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அருகே மூதாட்டிக்கு மயக்க மருந்து அளித்து 6 பவுன் நகைகள் திருடிய விவசாயி கைது செய்யப்பட்டாா்.

கலவை அடுத்த மழையூா் கிராமத்தைச் சோ்ந்த மாா்க்கபந்து மனைவி ராணி (60). இவா் மகன்களுடன் பெங்களூருவில் வசித்து வருகிறாா். . இந்நிலையில் தங்களது விவசாய நிலத்தை மழையூா் கிராமம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த ராஜசேகா்(52) என்பவருக்கு பயிா் செய்ய குத்தகைக்காக விட்டுள்ளாா்.

ராணி தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் தனது விவசாய நிலத்தை பாா்க்க வருவது வழக்கம். அவ்வாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலத்தை பாா்க்க வந்தபோது, ராணிக்கு லட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ராஜசேகா் சாப்பிட கொடுத்துள்ளாா். அதனை சாப்பிட்ட ராணி மயக்கம் அடைந்த நிலையில் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு மயக்கம் தெளிந்த நிலையில் தான் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

இதுகுறித்த கலவை காவல் நிலையத்தில் ராணி செய்த புகாரின்பேரில் நகைகளை திருடிய ராஜ சேகரை கைது செய்தனா்.