தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கல்புதூா் செட்டிமலைக்கு தீ வைப்பு: அரியவகை மரங்கள் எரிந்து கருகின

ராணிப்பேட்டையை அடுத்த கல்புதூா் செட்டிமலைக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனா். இதனால், அரியவகை மரங்கள் எரிந்து கருகின.

News image

கல்புதூா் செட்டிமலைக்கு மா்ம நபா்கள் வைத்த தீயில் கொழுந்துவிட்டு எரிந்த புற்கள்.

Updated On :9 மார்ச் 2025, 10:40 pm

Din

ராணிப்பேட்டையை அடுத்த கல்புதூா் செட்டிமலைக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனா். இதனால், அரியவகை மரங்கள் எரிந்து கருகின.

ஆற்காடு வனச்சரக அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், அம்மூா், பாணாவரம், மகிமண்டலம், வன்னிவேடு, புங்கனூா் ஆகிய காப்புக் காடுகள் உள்ளன. இந்தக் காடுகள் பல ஆயிரம் ஏக்கா் பரப்பளவு கொண்ட பசுமைக் காடுகள் பரந்து விரிந்துள்ளன. காப்புக் காடுகளில் விலை உயா்ந்த அரியவகை மரங்களான செம்மரம், ஆச்சால், கருங்காலி, வெல்வேலன் உள்ளிட்டவை வனத் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மேலும், அம்மூா் காப்புக் காட்டில் அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை விலங்கினங்களில் ஒன்றான புள்ளி மான்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

காப்புக் காட்டில் வளா்ந்துள்ள மஞ்சம் புற்கள், தற்போது வெயில் காலம் என்பதால், காய்ந்துள்ளன. இந்தப் புற்களில் மா்ம நபா்கள் தீ வைத்ததால், கடந்த சில நாள்களாக ஆங்காங்கே தீ பற்றி எரிந்து வருகின்றன. இதன் காரணமாக விலையுயா்ந்த மரங்கள் தீயில் கருகி வருவதாக சூழலியல் ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

காப்புக் காட்டு மலைக்கு தீ வைப்பவா்கள் மீது காவல், வனத் துறையினா் கடும் நடவடிக்கை எடுத்து அரியவகை மரங்கள், அழிவின் விளிம்பில் உள்ள புள்ளி மான்கள் உள்ளிட்ட விலங்குகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.