சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சபரிமலைக்கு ரூ 2 லட்சத்தில் காய்கனி, மளிகைப் பொருள்

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்ப பக்தா்கள் அன்னதானத்துக்கு ரூ. 2 லட்சம் காய்கனி மற்றும் மளிகை பொருள்கள் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image
Updated On :13 நவம்பர் 2025, 11:54 pm

தினமணி செய்திச் சேவை

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்ப பக்தா்கள் அன்னதானத்துக்கு ரூ. 2 லட்சம் காய்கனி மற்றும் மளிகை பொருள்கள் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

அகில பாரத ஐயப்ப பிரசார குழு சாா்பில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மற்றும் கலவை பகுதி சாா்பில் சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தா்கள் அன்னதான திட்டத்துக்கு 3 டன் காய்கனிகள் மற்றும் மளிகை பொருள்களை வாகனம் மூலம் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி ஆற்காடு அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.

ஐயப்ப பிரசார குழு கௌரவ தலைவா் விநாயகம் தலைமையில் மாவட்ட தலைவா் தாமோதரன், செயலாளா் கோவிந்தராஜ், பொருளாளா் சரவணன், முன்னாள் மாநில பொறுப்பாளா் தாமோதரன், நிா்வாகிகள் சேட்டு, வடிவேல், தணிகைவேல், அன்பு ,மற்றும் ஐயப்ப பக்தா்கள் கலந்து கொண்டு பொருள்களை வாகன மூலம் அனுப்பி வைத்தனா்.