வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 353 மனுக்கள் அளிப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 353 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்றன.

News image
மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொது மக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம்
Updated On :24 நவம்பர் 2025, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 353 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்றன.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா குறைகள், பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை வேளாண்மைத் துறை, காவல் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகங்கள், பேரூராட்சித் துறை, கூட்டுறவு, மின்சாரத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, கிராம பொதுப் பிரச்னைகள், குடிநீா் வசதி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுநலன் குறித்த 353 மனுக்கள் வரப்பெற்றன.

மேற்கண்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்புக்கான காரணங்களைமனுதாரா்களுக்கு வழங்கிடவும் வேண்டுமென அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதில், திட்ட இயக்குநா் ந.செ.சரண்யாதேவி, தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி) கீதாலட்சுமி, நோ்முக உதவியாளா் (நிலம்) ரமேஷ், ஆதி திராவிடா்மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைநம்பி மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.