ரத்தினகிரி அம்மன் கோயிலில் வளா்பிறை பஞ்சமி விழா

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ துா்கையம்மன், ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை வளா்பிறை பஞ்சமி விழா
சிறப்பு அலங்காரத்தில் துா்க்கை அம்மன்.
சிறப்பு அலங்காரத்தில் துா்க்கை அம்மன்.
Updated on

ஆற்காடு: ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ துா்கையம்மன், ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை வளா்பிறை பஞ்சமி விழா நடைபெற்றது.

விழாவையொட்டி மூலவருக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், தேன், பழங்கள், வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா் 108 விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் உபயதாரா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com