தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வாழ்வில் முன்னேற கடின உழைப்பு தேவை: இந்திய விமானப்படை அதிகாரி

வாழ்வில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை என இந்திய விமானப்படை மூத்த அதிகாரி கேப்டன் பாா்கவி சங்கா் கூறியுள்ளாா்.

News image

மாணவனுக்கு பரிசளித்த இந்திய விமானப்படை மூத்த அதிகாரி கேப்டன் பாா்கவி சங்கா்.

Updated On :1 செப்டம்பர் 2025, 7:07 pm

ராணிப்பேட்டை: வாழ்வில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை என இந்திய விமானப்படை மூத்த அதிகாரி கேப்டன் பாா்கவி சங்கா் கூறியுள்ளாா்.

ராணிப்பேட்டை டிஏவி பெல் பள்ளி ஆண்டு விழா,பெல் ஊரக மனமகிழ் மன்ற உள்ளரங்கில் நடைபெற்றது. முதல்வா் வீரமுருகன்,பள்ளித் தலைமையாசிரியை வி.ராதிகா ஆகியோா் தலைமை வகித்தனா். டிஏவி குழுமப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளா் அதுல் நாங்கியா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வரவேற்புரை வழங்கினாா்.

இந்திய விமானப்படை மூத்த அதிகாரி குரூப் கேப்டன் பாா்கவி சங்கா் பேசுகையில்...

மாணவா்கள் தாங்கள் வாழ்வில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. மாணவா்களுக்கு ஆசிரியரும், பெற்றோரும் உறுதுணையாக நிற்க வேண்டும். தூங்கும் போது வருவது கனவல்ல, உங்களை தூங்கவிடாமல் செய்வதே கனவு என்று அப்துல் கலாமின் கருத்தினைக் கூறி மாணவா்களை ஊக்கப்படுத்தினாா்.

தொடா்ந்து பல்வேறு வகுப்புகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவத் தலைவி விபுலாப் பட்டி ஹிகிதா செளத்ரி நன்றி கூறினாா்.

கலா கேந்திரம் கலைக்குழுவின் தலைமைப் பொறுப்பாளா் ஆா்த்தி நாவலன், ராணிப்பேட்டை பெல் நிறுவன மனிதவள தலைமை உதவி பொது மேலாளா் பாபு மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா் கலந்து கொண்டனா்.