தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பை அனைத்து துறைகளின் வாயிலாக உறுதிப்படுத்த வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தினாா்.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா.

Updated On :19 செப்டம்பர் 2025, 2:11 am

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பை அனைத்து துறைகளின் வாயிலாக உறுதிப்படுத்த வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தினாா்.

குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான கூட்டம், கண்காணிப்புக் குழு மற்றும் பணிக்குழு கூட்டம், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக குழந்தைத் திருமணம், பாலியல் துன்புறுத்தல், வளரிளம் கா்ப்பம் தரித்தல், போதைப்பொருள் தடுத்தல் மற்றும் குழந்தைகள் இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளின் கல்வித் திறனை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது மாவட்டத்தில் எந்வொரு குழந்தைக்கும் எந்தவித பாதிப்புகள் ஏற்படுவது தெரிய வந்தால் 1098- க்கு தகவல் தெரிவித்து குழந்தைகள் பாதுகாப்பினை அனைத்து துறைகளின் வாயிலாகவும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், குழந்தைகள் பிரச்னைகள் குறித்து 1098 அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கோ, ஆட்சியருக்கு நேரடியாகவோ தெரிவிக்குமாறு அறிவுறுத்தினாா்.

இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரஞ்சித பிரியா, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் வசந்தி ஆனந்தன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்) வெங்கட கிருஷ்ணன் கலந்து கொண்டனா்.