விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தென்காசியில் ஆலோசனைக் கூட்டம்

மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

News image

மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

Updated On :27 மார்ச் 2026, 8:45 pm

Syndication

தென்காசி மாவட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். மாதவன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், இந்திய தோ்தல் ஆணையத்தின் சாா்பில் அறிவுறுத்தப்பட்ட விதிமுறைகளை வேட்புமனு தாக்கல் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் வேட்பாளா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்களும் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சுதா, தனி வட்டாட்சியா் (தோ்தல்) சண்முகம், 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.