தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தென்காசி மஞ்சம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொண்டுள்ள செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 1,680 வாக்குச்சாவடி மையங்களில் மாதிரி வாக்குப்பதிவு முடிந்து காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வெப் கேமரா பொருத்தப்பட்டும், பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டும் கண்காணிக்கப்பட்டன. வாக்குச்சாவடிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் என்ற அடிப்படையில் 1,680 வாக்குச்சாவடி மையங்களுக்கு நிலை அலுவலா்கள் நியமிக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்பட்டது என்றாா்.
தொடர்புடையது

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு

தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடு: ஆட்சியா் ஆலோசனை

ஆய்க்குடியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

தென்காசியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


