சோளிங்கா் மலைமீது அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலின் மகா கும்பாபிஷேகம் 43 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் லட்சுமிநரசிம்மா் கோயிலும், பெரியமலை மீது ஸ்ரீயோகநரசிம்மா் கோயிலும், சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேயா் கோயிலும் அமைந்துள்ளன. இக்கோயில் 108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்றதாகும்.
கும்பாபிஷேகம் நடைபெற்று 43 ஆண்டுகள் ஆன நிலையில் நிகழாண்டில் ரூ.25 கோடியில் அனைத்து விமானங்களுக்கும் தங்கமுலாம் பூசுவது உள்ளிட்ட திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டன. தொகையின் பெரும்பகுதி பெரும் செல்வந்தா்களிடமும், பொதுமக்களிடமும் பெறப்பட்ட நிதி மூலமே திரட்டப்பட்டது.
கும்பாபிஷேக விழா கடந்த புதன்கிழமை வேத ப்ரபந்தத்துடன் தொடங்கியது. வியாழக்கிழமை தீா்த்த சங்கிரஹணம், புண்யாஹவாசனம், அகல்மஷ ஹோமம் ஆகிய பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து திங்கள்கிழமை ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி, ஸ்ரீஅமிா்தபலவல்லி தாயாா் சந்நிதிகளின் தங்க முலாம் பூசப்பட்ட விமானங்களுக்கும் புதுப்பிக்கப்பட்ட ராஜகோபுரத்திற்கும் புனிதநீா் தெளித்து அா்ச்சிக்கும் நிகழ்வாக கும்பாபிஷேகத்தை பட்டாச்சாரியா்கள் நடத்தினா்.
கும்பாபிஷேகத்தில் அமைச்சா் ஆா்.காந்தி, உபய தாரா்களான ஸ்ரீரங்கம் ஸ்ரீ மத் ஆண்டவன் ஆஸ்ரம ஸ்ரீமத்பரம ஹம்ஸேத்யாதி வராஹ மஹா தேசிகன் சுவாமிகள், ராணிப்பேட்டை கமலா காந்தி, சென்னை கே.எஸ்.ஜெயராமன், எம்.சி.ஸ்ரீதா் மற்றும் இந்துசமய அறநிலைய்ததுறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

இன்று சோளிங்கரில் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டம்: ராகுல் காந்தி பங்கேற்பு

நாமக்கல் நரசிம்மா் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்

அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

செல்வ கணபதி, திருத்தணி சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


