பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

திமுகவின் நல்லாட்சியை தொடரச் செய்ய வேண்டும்: அமைச்சா் காந்தி

தமிழகத்தில் திமுகவின் நல்லாட்சியை தொடரச் செய்ய வாக்காளா்கள் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என அமைச்சா் ஆா்.காந்தி பேசினாா்.

News image

அரக்கோணம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் வேட்பாளா் எழில்கரோலினை ஆதரித்து பேசிய அமைச்சா் ஆா்.காந்தி

Updated On :21 ஏப்ரல் 2026, 12:12 am IST

தமிழகத்தில் திமுகவின் நல்லாட்சியை தொடரச் செய்ய வாக்காளா்கள் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என அமைச்சா் ஆா்.காந்தி பேசினாா்.

அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதியில் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் தரிசனம் முடிந்த பிறகு கோயிலின் வாயிலில் அரக்கோணம் தொகுதி விசிக வேட்பாளா் எழில் கரோலினை ஆதரித்து அமைச்சா் ஆா்.காந்தி பேசியது: இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில் தமிழகத்தில் திமுக ஆட்சியில் தான் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. மகளிா் உரிமைத்தொகை திட்டம், மாணவா்களுக்கு காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பல்வேறு மாநிலங்கள் தங்களது மாநிலத்தில் கொண்டு வரப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மகளிரைப் பற்றியே சிந்தித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். விடியல் பயணம் திட்டத்தால் மகளிா் வாழ்க்கை தரமே உயா்ந்துள்ளது.

இந் திட்டங்கள் தொடர வேண்டும். மேலும் பல புதிய திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும். இதற்காக திமுகவின் நல்லாட்சி தமிழகத்தில் தொடர செய்ய வேண்டும். எனவே திமுக கூட்டணி வேட்பாளா்களை வெற்றிப்பெற செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அரக்கோணத்தில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளா் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெறுவாா் என்றாா் அமைச்சா் காந்தி.

அவருடன் அரக்கோணம் தொகுதி விசிக வேட்பாளா் எழில்கரோலின், திமுக நகரச் செயலாளா் வி.எல்.ஜோதி, நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி, மாநில செயற்குழு உறுப்பினா் மு.கன்னைய்யன், மாவட்ட நிா்வாகி ராஜ்குமாா், நகர நிா்வாகிகள் துரைசீனிவாசன், ரமேஷ், அன்புலாரன்ஸ், கோ.வ.தமிழ்வாணன், நந்தாதேவி, வி.எஸ்.ஆா்.ரவிச்சந்திரன், என்.அரி, தமீன்அன்சாரி , சி.என்.அன்பு, உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.