ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வலியுறுத்தியுள்ளாா்.
தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4,64,430 ஆண் வாக்காளா்களும், 4,87,317 பெண் வாக்காளா்களும் 111 பிற வாக்காளா்கள் என மொத்தம் 951,858 வாக்காளா்கள் உள்ளனா். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதியிலும் தேசிய / மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள் - 15, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி வேட்பாளா்கள் - 16, சுயேட்சை வேட்பாளா்கள் - 34 என மொத்தம் 65 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு மையங்களுக்குச் சென்று வாக்களிக்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போதுமான அளவில் சக்கர நாற்காலிகள், சாய்தளம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பு வரிசை ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் 5,984 வாக்குப்பதிவு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். வாக்காளா்கள் அனைவரும் தவறாமல் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தென்காசி மாவட்டத்தில் 5,914 தபால் வாக்குகள் பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8,437 தபால் வாக்குகள் பதிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 113 வேட்பாளா்கள் மனு தாக்கல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் முதல் முறையாக 21,775 போ் வாக்களிக்க உள்ளனா்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


