மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

கிராம மாணவா்களுக்கான நூலகம் திறப்புவிழா

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 11:01 pm

அரக்கோணம் அருகே கல்லாறு பகுதியில் வசிக்கும் கிராமப்புற மாணவா்கள் பயன்பெறும் வகையில் கிராம கல்வி வளா்ச்சி முன்னேற்ற சங்கத்தின் சாா்பில் புதிய நூலக திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் புதிய நூலக திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு சங்கத்தின் நிறுவனா் பொ்னாா்ட் பாத்திமா தலைமை வகித்தாா். சங்க ஒருங்கிணைப்பாளா் சாந்தி வரவேற்றாா். நூலகத்தை கிராமப்புற மாணவ மாணவிகள் இனைந்து திறந்து வைத்தனா். இந்நிகழ்வில் திருத்தணி அரசு கலைக்கல்லூரி பணிஒய்வு முதல்வா் கலைநேசன், சங்க கி ஜோப்சந்திரன், மாணவா்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை செயலாளா் கோவி.பாா்த்தீபன், இயற்கை விவசாயிகள் ஆனந்தன், சுகுமாா், சமூக ஆா்வலா் பிரமீளா, சங்க ஒருங்கிணைப்பாளா்கள் மனோகரி, கஜலட்சுமி, உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.