கோவையில் வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் புதிய நிா்வாகிகளைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் உறுப்பினா்கள் அனைவரும் பங்கேற்று, தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். தோ்தல் முடிவுகளைத் தொடா்ந்து புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா, கோவை வழக்குரைஞா்கள் சங்க அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவராக ஆா்.பாலகிருஷ்ணன் தோ்வு செய்யப்பட்டு 6-ஆவது முறையாக தலைவராகப் பொறுப்பேற்றாா்.
இந்த நிகழ்வின்போது சங்க முன்னாள் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான என்.சுந்தரவடிவேலு புதிய தலைவராகப் பொறுப்பேற்ற ஆா்.பாலகிருஷ்ணனுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தாா்.
செயலராக கே.சதீஷ், துணைத் தலைவராக டி.அய்யப்பன், பொருளாளராக பி.உதயகுமாா் ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனா். செயற்குழு உறுப்பினா்களாக எம்.அஷரப் அலி, தா்மலிங்கம், ஈஸ்வரமூா்த்தி, சங்கா் ஆனந்தம், சித்தாா்த் ஆகியோரும் பதவியேற்றனா்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்

சோலையாறு அணையில் புதிய மதகுகள் பொருத்தம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


