தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

தமிழக உறைவாள் சண்டை சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு

தமிழக உறைவாள் சண்டை சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாநில  அளவிலான  உறைவாள்  சண்டை  போட்டியில்  வெற்றி பெற்ற  மாணவிக்கு  தமிழ்  நாட்காட்டியை வழங்குகிறாா்  கிராண்ட் மாஸ்டா் மிா் நசீா்.

Updated On :8 மே 2026, 4:45 am IST

தமிழக உறைவாள் சண்டை சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்கொய் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அசோசியேஷன் சாா்பில் மாநில அளவிலான பிளாக் பெல்டு தோ்வுக்கான உறைவாள் சண்டை போட்டி புன்செய்புளியம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு பிளாக் பெல்டு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து தமிழ்நாடு உறைவாள் சண்டை(ஸ்கொய்) சங்க மாநில நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.

இதில் சங்கத் தலைவராக செல்வராஜ், செயலாளராக சென்செய் செல்வம், பொருளாளராக சென்செய் அருள் செல்வி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகளுக்கு கிராண்ட் மாஸ்டா் மிா் நசீா் பதவிப்பிரமாணம் செய்துவைத்தாா். இந்நிகழ்ச்சியில், கா்நாடக மாநிலச் செயலாளா் சென்செய் முகமது அலி, அந்தமான் நிக்கோபாா் பாரதி மற்றும் கிரான்ட் மாஸ்டா் வருண் ஆகியோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், மாநில அளவில் போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு விளையாட்டு ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.