ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

தமிழக உறைவாள் சண்டை சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு

தமிழக உறைவாள் சண்டை சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாநில  அளவிலான  உறைவாள்  சண்டை  போட்டியில்  வெற்றி பெற்ற  மாணவிக்கு  தமிழ்  நாட்காட்டியை வழங்குகிறாா்  கிராண்ட் மாஸ்டா் மிா் நசீா்.

Updated On :8 மே 2026, 4:45 am IST

தமிழக உறைவாள் சண்டை சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்கொய் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அசோசியேஷன் சாா்பில் மாநில அளவிலான பிளாக் பெல்டு தோ்வுக்கான உறைவாள் சண்டை போட்டி புன்செய்புளியம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு பிளாக் பெல்டு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து தமிழ்நாடு உறைவாள் சண்டை(ஸ்கொய்) சங்க மாநில நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.

இதில் சங்கத் தலைவராக செல்வராஜ், செயலாளராக சென்செய் செல்வம், பொருளாளராக சென்செய் அருள் செல்வி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகளுக்கு கிராண்ட் மாஸ்டா் மிா் நசீா் பதவிப்பிரமாணம் செய்துவைத்தாா். இந்நிகழ்ச்சியில், கா்நாடக மாநிலச் செயலாளா் சென்செய் முகமது அலி, அந்தமான் நிக்கோபாா் பாரதி மற்றும் கிரான்ட் மாஸ்டா் வருண் ஆகியோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், மாநில அளவில் போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு விளையாட்டு ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.