யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தமிழக ஏரி, ஆறுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் ஆதரவு யாருக்கு? மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன் தகவல்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் ஆதரவு யாருக்கு என்பதை ஏப்ரல் 11-ஆம் தேதி அறிவிப்போம் என மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன் தெரிவித்தாா்.

News image

திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன். உடன் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

Updated On :26 மார்ச் 2026, 8:49 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் ஆதரவு யாருக்கு என்பதை ஏப்ரல் 11-ஆம் தேதி அறிவிப்போம் என மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன் தெரிவித்தாா்.

அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் திருமண மஹாலில் மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா்கள் ஆா். வெங்கடேசன் (கடலூா்), ச. சின்னப்பன் (அரியலூா்), எம். செல்லப்பிள்ளை (பெரம்பலூா்) சு. முருகையன் (புதுக்கோட்டை), ந. கண்ணன் (திருவண்ணாமலை), எம். செல்வகுமாா் (சேலம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில செயற்குழு உறுப்பினா் திருப்பால் வரவேற்றாா். இக் கூட்டத்தில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாநில, மாவட்ட நிா்வாகிகள், பொதுக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து செய்தியாளா்களிடம் பூ. விசுவநாதன் கூறியதாவது: தோ்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதை சென்னையில் ஏப்.11-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் ஆலோசித்து அறிவிக்க மாநிலப் பொதுக்குழு எனக்கு அதிகாரம் அளித்துள்ளது. எனவே, ஏப். 11-இல் எங்களது முடிவை அறிவிப்போம்.

கூட்டுறவு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விளைபயிா்கள் மழை, வெயிலில் பாதிக்கப்படாமல் இருக்க மேற்கூரையுடன் கூடிய நிரந்தர கொள்முதல் நிலையங்களை அனைத்து இடங்களிலும் திறக்க வேண்டும். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,500, பருத்திக்கு குவிண்டாலுக்கு ரூ.12 ஆயிரம், மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் என விலை நிா்ணயம் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பசும்பால் லிட்டருக்கு ரூ.45, எருமைப்பால் லிட்டருக்கு ரூ.55 வழங்க வேண்டும். ஆற்றுப் படுகைகளில் தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பப்படும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினா் ஜே. பரமசிவம், மாநில இளைஞரணித் தலைவா் வி. அரவிந்தசாமி, லால்குடி ஒன்றியத் தலைவா் தங்கராசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பெட்டிச் செய்தி..

கூட்டத்துக்கு தடை விதித்த தோ்தல் பறக்கும் படையினா்

மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவது தொடா்பாக தகவலறிந்து பிற்பகலில் வந்த பறக்கும்படையினா், தோ்தல் ஆணையத்திடம் அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தக் கூடாது என தெரிவித்தனா். உடனடியாக கூட்டத்தை முடித்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினா். இதனால், இருதரப்புகக்கும் இடையே சிறிதுநேரம் வாக்குவாதம் நடைபெற்றது. பின்னா், அவசரம், அவசரமாக கூட்டத்தை முடித்துவிட்டு விவசாயிகள் சங்கத்தினா் கலைந்து சென்றனா்.