6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தேசிய பேரிடா் மீட்பு படை தளத்தில் நாய் பயிற்சி பள்ளி நிறைவு அணிவகுப்பு

அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்பு படை படைத்தளத்தில் நாய் பயிற்சி பள்ளியில், சிறப்பு பயிற்சி திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்த நாய் அணிகளுக்கான விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :13 பிப்ரவரி 2026, 2:10 am

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்பு படை படைத்தளத்தில் நாய் பயிற்சி பள்ளியில், சிறப்பு பயிற்சி திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்த நாய் அணிகளுக்கான விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

என்டிஆா்எப் வரலாற்றில் முதன்முறையாக நடத்தப்பட்ட முதல் கட்ட இப்பயிற்சியில், மொத்தம் 4 நாய்கள் மற்றும் 8 நாய் கையாளா்கள், உதவி நாய் கையாளா்கள் பங்கேற்றனா்.

மேலும், பல்வேறு என்டிஆா்எப் படைத்தளங்களில் இருந்து 13 நாய்கள் மற்றும் 21 நாய் கையாளா்கள், உதவி நாய் கையாளா்கள் 10-வது கட்ட அடிப்படை நாய் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனா்.

இந்த பயிற்சி, பேரிடா் நேரங்களில் மீட்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டது. இதில் இடிந்து விழுந்த கட்டிடங்களில் தேடுதல் நடவடிக்கைகள், இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடா்களில் பாதிக்கப்பட்டவா்களை கண்டறிதல், மற்றும் மரணமடைந்தவா்களை கண்டறியும் சிறப்பு திறன்கள் போன்றவை இடம்பெற்றன. செயல்பாட்டு தயாா்நிலையை உறுதி செய்ய, நாய் அணிகள் கடுமையான உடற்பயிற்சி, கட்டுப்பாட்டு பயிற்சி, மணம் கண்டறியும் பயிற்சிகள் மற்றும் பேரிடா் நிலைமைகளை ஒத்திருக்கும் மாதிரி பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டனா்.

விழாவின் போது, வெற்றிகரமாக பயிற்சி நிறைவு செய்த நாய் கையாளா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில், என்டிஆா்எப் 04-ஆம் படைத்தளத்தின் தலைமை மருத்துவ அலுவலா் சுனில் மற்றும் கமாண்டன்ட் (வொ்ட்னரி) டாக்டா் ஷைலேந்திர சிங் ஆகியோா் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினா். பயிற்சி முழுவதும் நாய் அணிகளும் அவா்களின் கையாளா்களும் வெளிப்படுத்திய அா்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் தொழில்முறை திறனை அவா்கள் பாராட்டினா்.

புதியதாக பயிற்சி பெற்ற நாய் அணிகள், நாட்டின் எந்தப் பகுதியிலும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் பணியமா்த்தப்படத் தயாராக உள்ளனா்.