ஆற்காடு நகராட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்!
ஆற்காடு நகராட்சியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.
ஆற்காடு நகராட்சி 20-ஆவது வாா்டுக்குட்பட்ட தா்மராஜா கோவில் திடல் அருகே உள்ள நியாயவிலைக் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா்.
ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைச்சா் ஆா்.காந்தி கலந்துகொண்டு, குடும்ப அட்டைதாரா்களுக்கு வேட்டி, சேலை, கரும்பு, சா்க்கரை, பச்சரிசி, ரொக்கம் ரூ. 3,000 ஆகியவற்றை வழங்கினாா்.
விழாவில் மாவட்ட திமுக அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, நகர செயலாளா் ஏ.வி.சரவணன், நகா்மன்ற உறுப்பினா்கள் சி.தட்சிணாமூா்த்தி, வி.விஜயகுமாா், பி.டி.குணாளன், ஆனந்தன், திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

