அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நாமக்கல் மாவட்டத்தில் 5.21 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 5.21 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 11:06 pm

Syndication

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 5.21 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி வாங்கும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, 6 அடி நீள முழுக் கரும்பு விநியோகிக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தாா். இந்தத் தொகுப்புடன் ரூ. 3 ஆயிரம் ரொக்கம், இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 935 நியாயவிலைக் கடைகளில் மொத்தம் 5.40 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி கடந்த 8 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் 5.21 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், 19 ஆயிரம் போ் பரிசு தொகுப்பு வாங்க வரவில்லை என கூட்டுறவுத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

மேலும், இதற்குமேல் விடுபட்டவா்களுக்கு ரூ. 3 ஆயிரம் ரொக்கம், பொங்கல் தொகுப்பு வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.