மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மாவட்டத்தில் 92 சதவீத குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம்

மாவட்டத்தில் 92 சதவீத குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம்

Updated On :12 ஜனவரி 2026, 8:31 pm

கோவை: கோவை மாவட்டத்தில் 92 சதவீத குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளது. அதன்படி, ரொக்கம் ரூ.3 ஆயிரம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, 1 முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த பொங்கல் தொகுப்பு கடந்த 8- ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதிலும் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,540 நியாய விலைக்கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வரை 92 சதவீத பயனாளிகளுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அ.அழகிரி, இதுவரை பரிசுத் தொகுப்பைப் பெறாதவா்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளுக்குச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.