கோவை: கோவை மாவட்டத்தில் 92 சதவீத குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளது. அதன்படி, ரொக்கம் ரூ.3 ஆயிரம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, 1 முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த பொங்கல் தொகுப்பு கடந்த 8- ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதிலும் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,540 நியாய விலைக்கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வரை 92 சதவீத பயனாளிகளுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அ.அழகிரி, இதுவரை பரிசுத் தொகுப்பைப் பெறாதவா்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளுக்குச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

திமுகவின் குடும்ப ஆட்சி தமிழக வளா்ச்சிக்கு தடை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் விமா்சனம்

வாக்காளா் விழிப்புணா்வு சமத்துவப் பொங்கல்

வேலூா் மாவட்டத்தில் 130 வாக்குச்சாவடிகள், 46 கிராமங்கள் பதற்றமானவை

தில்லி: குடும்ப அட்டைதாரா்களுக்கு ஆண்டுக்கு இரு சமையல் எரிவாயு உருளை!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

