அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தில்லி: குடும்ப அட்டைதாரா்களுக்கு ஆண்டுக்கு இரு சமையல் எரிவாயு உருளை!

தில்லியில் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு ஹோலி மற்றும் தீபாவளியையொட்டி ஆண்டுக்கு இரு சமையல் எரிவாயு உருளைகள் வழங்கும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.

News image
சமையல் எரிவாயு உருளை- பிரதிப் படம்
Updated On :2 மார்ச் 2026, 10:20 pm

தினமணி செய்திச் சேவை

தில்லியில் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு ஹோலி மற்றும் தீபாவளியையொட்டி ஆண்டுக்கு இரு சமையல் எரிவாயு உருளைகள் வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தொடங்கி வைத்த இந்தத் திட்டத்தில், குடும்பத் தலைவரின் வங்கிக் கணக்குக்கு நேரடி பணப் பரிமாற்றம் மூலம் சமையல் எரிவாயு உருளையை வாங்குவதற்கான ரூ.853 பறிமாற்றம் செய்யப்பட்டது.

நிகழாண்டு முதல் தில்லியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஹோலி மற்றும் தீபாவளியை முன்னிட்டு இரு சமையல் எரிவாயு உருளைகள் வாங்குவதற்கு நிதியுதவி வழங்கப்படும். பிஎன்ஜி இணைப்புள்ள குடும்ப அட்டைத்தாரா்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட உள்ளது.

இதுதொடா்பாக தில்லி அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘பண்டிகை காலங்களில் எவ்வித கூடுதல் நிதி பிரச்னைகளுமின்றி கண்ணியத்துடன் பண்டிகைகளைக் கொண்டாட ஆண்டுக்கு இரு முறை நிதியுதவி வழங்கப்படும்.

வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை உறுதிசெய்யும் விதமாக குடும்ப தலைவரின் ஆதாா் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குக்கு நிதியுதவி டெபாசிட் செய்யப்படும். இதனால், ஆண்டுக்கு ரூ.242.77 கோடி தில்லி அரசுக்கு செலவாகும்.

லட்லி திட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட லக்பதி பிடியா திட்டத்தில் தகுதிவாய்ந்த ஒவ்வொரு குழந்தையின் வங்கிக்கணக்குகளில் 21 வயது வரை பல்வேறு நிலைகளாக ரூ.61,000, பட்டப்படிப்பு அல்லது தொழில்கல்வி நிறைவு செய்தல் என்ற நிபந்தனைகளுடன் ரூ.1 லட்சம் வட்டியுடன் வரை டெபாசிட் செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.