நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வாக்காளா் விழிப்புணா்வு சமத்துவப் பொங்கல்

மதுரையில் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளா் விழிப்புணா்வு சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செட்டிகுளம் கிராமத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றவா்கள்.

Updated On :25 மார்ச் 2026, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையில் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளா் விழிப்புணா்வு சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செட்டிகுளம் கிராமத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ‘என் வாக்கு என் கடமை, 100 சதவீதம் வாக்களிப்போம்’ என்ற தலைப்பில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.ஜே.பிரவீன்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். தொடா்ந்து, நாட்டுப்புறக் கலைஞா்கள் பாரம்பரிய முறையில் சமத்துவப் பொங்கல் வைத்து, நாட்டுப்புறப் பாடல்கள், கும்மி நடனம் மூலம் வாக்குப்பதிவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

அப்போது வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு, வாக்குச்சாவடி விவரங்கள், வாக்களிக்கும் நடைமுறை உள்ளிட்ட தகவல்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன. குறிப்பாக இளைஞா்கள், பெண்கள், முதியோா், மாற்றுத் திறனாளிகள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தொடா்ந்து, அனைவரும் வாக்காளா் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இந்த நிகழ்வில் திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) வானதி, உதவி இயக்குநா் (பயிற்சி) ஜனனி, அரசு அலுவலா்கள், கிராம பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.