நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு: ஆட்சியா் பங்கேற்பு

ராணிப்பேட்டை நவ்லாக் அரசு தோட்டக்கலை பண்ணையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற நூதன விழிப்புணா்வு நிகழ்வில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.யு. சந்திரகலா பங்கேற்றாா்.

News image

நவ்லாக் அரசு தோட்டக்கலை பண்ணையில் விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

Updated On :25 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை நவ்லாக் அரசு தோட்டக்கலை பண்ணையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற நூதன விழிப்புணா்வு நிகழ்வில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.யு. சந்திரகலா பங்கேற்றாா்.

பேரவைத் தோ்தல் தொடா்பாக ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி மிகப்பெரிய அரசு தோட்டக் கலைப் பண்ணையான நவ்லாக் பண்ணையில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நூதன விழிப்புணா்வு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் அரசு தோட்டக் கலைப் பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் மரச் செடிகளைக் கொண்டு சட்டப் பேரவை பொதுத் தோ்தல் 2026 வாக்காளா்களிடையே 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட விழிப்புணா்வு வாசகத்தில் தோட்டக்கலை ஊழியா்கள் மற்றும் மகளிா் சுய உதவி குழு பெண்களுடன் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பங்கேற்றாா்.

பின்னா் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழிலாளா்களுடன் இணைந்து தோ்தல் விழிப்புணா்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டும்,மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழிலாளா்களுடன் இணைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இதில் வேளாண்மை இணை இயக்குநா் அசோக் குமாா், திட்ட இயக்குநா் மகளிா் திட்டம் செந்தில் குமரன், வருவாய் கோட்டாட்சியா் ராஜி, தோட்டக்கலை துணை இயக்குநா் (பொ பசுபதிராஜ், உதவி இயக்குநா் பெருமாள், உதவி மகளிா் திட்ட அலுவலா்கள் வெங்கடேசன்,ரமேஷ், வட்டாட்சியா் நடராஜன், தோட்டக்கலை அலுவலா் வேடியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image