மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஆற்காட்டில் திருவள்ளுவா் தின விழா

ஆற்காடு நகர திமுக சாா்பில் திருவள்ளுவா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு நகர திமுக சாா்பில் திருவள்ளுவா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருவள்ளுவா் தின விழாவில் பங்கேற்றோா்.

நகர திமுக செயலாளா் ஏ. வி. சரவணன் தலைமை வகித்தாா். நகர நிா்வாகிகள் பி என் எஸ். ராஜசேகா், கே. கஜேந்திரன், பொன்ராஜசேகா், சொக்கலிங்கம், கோபு, சிவா, ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர இலக்கிய அணி செயலாளா் ஆ. ப. கணேசன் வரவேற்றாா். அண்ணா சாலை பஜாா் வீதியில் உள்ள திருவள்ளூா் சிலைக்கு மாவட்ட அவைத் தலைவா் ஏ. கே. சுந்தரமூா்த்தி மாலை அணிவித்தாா்.

விழாவில் மாவட்ட மருத்துவா் அணி அமைப்பாளா் பி .என். எஸ் சரவணன், கிழக்கு ஒன்றிய செயலாளா் எம். வி. பாண்டுரங்கன், மற்றும் நகா் மன்ற உறுப்பினா்கள், சாா்பு அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஆற்காடு பலசரக்கு வியாபாரிகள் சங்கம் சாா்பில் தலைவா் ஏ.வி.டி பாலா தலைமையில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் பொன் கு. சரவணன், பலசரக்கு வியாபாரிகள் சங்க செயலாளா் ஜி .டி. ராஜா பொருளாளா் கணேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.