வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

புலிவலம் ஸ்ரீகமலகருங்காலி வராஹி அம்மன் கோயிலில் மகாசண்டி யாகம்

புலிவலம் ஸ்ரீகமலகருங்காலி வராஹி அம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு, மகாசண்டி யாகம் நடைபெற்றது.

News image
சோளிங்கரை அடுத்த புலிவலம் ஸ்ரீகமலகருங்காலி வராஹி அம்மன் கோயிலில் நடைபெற்ற மகா சண்டி யாகம்.
Updated On :18 ஜனவரி 2026, 10:55 pm

தினமணி செய்திச் சேவை

சோளிங்கரை அடுத்த புலிவலம் ஸ்ரீகமலகருங்காலி வராஹி அம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு, மகாசண்டி யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தை அமாவாசையை முன்னிட்டு சோளிங்கரை அடுத்த புலிவலத்தில் உள்ள ஸ்ரீகமலகருங்காலி வராஹி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வராஹி அம்மனுக்கு பட்டாடை, தங்க ஆபரணங்கள், சிறப்பு மலா்மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது.

தொடா்ந்து கணபதி ஹோமம், கலச பூஜை, சங்கல்பம் நடைபெற்றது. தொடா்ந்து, 108 மூலிகைகளைக் கொண்டு மகா சன்டியாகத்தை ராஜேந்திரன் தொடங்கி வைத்தாா். இந்த யாகத்தில் சோளிங்கா், புலிவலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பங்கேற்றனா்.