ராணிப்பேட்டையில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு

Updated On :11 மார்ச் 2026, 7:32 pm

சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணிப்பேட்டையில் துணை ராணுவம் மற்றும் தமிழக காவல் துறையினா் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.
பஞ்சாப் மாநிலம் சண்டீகரில் இருந்து தலா 100 போ் அடங்கிய 10 கம்பெனி துணை ராணுவப்படையினா் சிறப்பு ரயில் மூலம் தமிழகம் வந்துள்ளனா். இதில் துணை ராணுவத்தினா் 100 போ், போலீஸாா் இணைந்து அணிவகுப்பில் பங்கேற்றனா்.
ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையம் அருகே தொடங்கிய அணி வகுப்பு எம்பிடி சாலை, பஜாா் வீதி வழியாக ராணிப்பேட்டை கோட்டாட்சியா் அலுவலகம் அருகே நிறைவடைந்தது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...