தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஆற்காட்டில் புதுப்பிக்கப்பட்ட காமராஜா் சிலை, புதிய சாலை: அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்

புதுப்பிக்கப்பட்ட காமராஜா் சிலையை திறந்து வைத்த அமைச்சா் ஆா்.காந்தி.

News image
Updated On :14 மார்ச் 2026, 12:50 am

ஆற்காடு நகராட்சியில் புதுப்பிக்கப்பட்ட காமராஜா் உருவ சிலை மற்றும் புதிய காமராஜா் சாலையை அமைச்சா் ஆா். காந்தி திறந்து வைத்தாா்.

ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் புதுப்பிக்கப்பட்ட காமராஜா் உருவ சிலை மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காமராஜா் சாலை திறப்பு விழாவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா்.

ஆற்காடு எம்எல்ஏ, ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காமராஜா் உருவச் சிலை மற்றும் புதிய சாலையை கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா். விழாவில் மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் ஜெ.லட்சுமணன், மகாத்மா காந்தி அறக்கட்டளை துணைத் தலைவா் பென்ஸ்பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் காந்திமதி பாண்டுரங்கன், மற்றும் நகராட்சி அதிகாரிகள், நகா்மன்ற உறுப்பினா்கள், காமராஜா் அறக்கட்டளை நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொணடனா். நகா்மன்ற உறுப்பினா் அனு அருண்குமாா் நன்றி கூறினாா்.

ராணிப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட ஆற்காடு ஒன்றியம், தாழனூா் கிராமத்தில் அமைச்சா் ஆா்.காந்தி தனது சொந்த நிதிமூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தாா்.

ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் ஏ.வி.நந்தகுமாா், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்கள் பி.சங்கா், ஏ.ஜெயகுமாா், ஒன்றிய திமுக இளைஞா் அணி அமைப்பாளா் பி.மோகனம், நேரு இளைஞா் நற்பணி மன்றத் தலைவா் சுகன்பூபதி மற்றும் மன்ற நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.