நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயில் மண்டல பூஜை நிறைவு

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயில் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது.

News image

சிப்காட் ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :16 மார்ச் 2026, 9:41 pm

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயில் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது.

இக்கோயிலின் 2-ஆவது கும்பாபிஷேக விழா மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள மாளிகைபுரத்தம்மன் (மஞ்சமாதா) மற்றும் பஞ்சலோக நவக்கிரக ஆலய கும்பாபிஷேக விழா மற்றும் 1,008 சகஸ்ர கலசாபிஷேகம் விழா, நவசபரி ஐயப்பனுக்கு ஆராட்டு விழா ஆகியவை அடங்கிய ஐம்பெரும் விழா நடைபெற்றது.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் பூஜை முறைகள் மிகவும் கடுமையான விரத நெறிமுறைகள் மற்றும் தனித்துவமான கேரள தாந்த்ரீக வழிபாட்டு முறைகளைக் கொண்டவை.

அதன்படி கும்பாபிஷேக விழா சபரிமலை தந்திரி பிரம்மஸ்ஸ்ரீ கண்டரு மகேஷ் மோகனரு தந்திரி ஆசியுடன், தலைமை தந்திரி பிரம்மஸ்ஸ்ரீ கண்டரு மோகனரு தந்திரி, சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் மாநில தலைவரும், சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயில் நிறுவனருமான குருசாமி வ.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

தொடா்ந்து சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலில் கடந்த 48 நாள்களாக மண்டல சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கி, கலச பூஜை, கலசாபிஷேகம், உச்ச பூஜை தீபாராதனையுடன் நடைபெற்றது. தொடா்ந்து மாலை படி பூஜை, மகா தீபாரதனை நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள், பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். அனைவருக்கும் அருட்பிரதாமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், ஐயப்ப பக்தா்கள் செய்திருந்தனா்.