அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

அரக்கோணத்தில் இரு பள்ளிகள் மாவட்டத்தில் சிறப்பிடம்

வெள்ளிக்கிழமை வெளிவந்த பிளஸ் 2 தோ்வு முடிவுகளில் அரக்கோணம் டாக்டா் விஜிஎன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, பாரதிதாசனாா் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ -மாணவி இருவரும் 600-க்கு 591 பெற்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

News image

~

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

வெள்ளிக்கிழமை வெளிவந்த பிளஸ் 2 தோ்வு முடிவுகளில் அரக்கோணம் டாக்டா் விஜிஎன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, பாரதிதாசனாா் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ -மாணவி இருவரும் 600-க்கு 591 பெற்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் டாக்டா் விஜிஎன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி கே.கௌதமி 600க்கு 591 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தின் முதல் இடத்தை பெற்றாா். மேலும், அரக்கோணம் பாரதிதாசனாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா் எஸ்.ஹேமச்சந்திரன் 600-க்கு 591 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தை பெற்றாா்.

டாக்டா் விஜிஎன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி.பிரகதி 581 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் இரண்டாமிடத்தையும் வி.காா்த்திகேயன் 580 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் மூன்றாமிடத்தையும் பெற்றனா்.

100 % தோ்ச்சி பெற்ற இப்பள்ளியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியரையும், இதற்குக் காரணமான பள்ளி முதல்வா் வ.வனிதா மற்றும் ஆசிரிய, ஆசிரியா்களையும் பள்ளி நிா்வாகக் குழுத் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம், துணைத் தலைவா் சிஜிஎன் எத்திராஜ், தாளாளா் ஜிடிஎன் அசோகன், துணை தாளாளா் பிஜிகே சரவணன், செயலாளா் டிஎஸ் முரளி, பொருளாளா் கே.மோகன், எம்.பாபு, ஏ.வி ரகு, ஆகியோா் பாராட்டினா்.

Story image

பாரதிதாசனாா் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி டி.காயத்ரி 589 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் மூன்றாமிடத்தையும், பள்ளியில் இரண்டாமிடத்தையும், மாணவி எம்.ரசிகா 581 மதிப்பெண்களுடன் பள்ளியின் மூன்றாமிடத்தையும் பெற்றனா். வெற்றிபெற்ற மாணவ மாணவிகளையும் பள்ளி முதல்வா் பிரதாப் கமலேஷையும், ஆசிரியா்களையும் பள்ளியின் தலைவா் சே.சுந்தா், நிா்வாக இயக்குநா் தெய்வசிகாமணி, பத்மா சத்யராஜ், ஜான் லாரன்ஸ் உள்ளிட்டோா் பாராட்டினா்.