ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் நான்காம் ஆண்டு வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனையுடன் மலையடிவாரத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் சிறப்பு யாக பூஜை அலங்கரிக்கப்பட்ட உற்சவா் காலை, மாலையில் பல்வேறு வாகன அலங்காரத்துடன் வீதியுலா நடைபெற்று வருகிறது.
விழாவின் 9-ஆவது நாளான சனிக்கிழமை முக்கிய நிகழ்வான வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரை கோயில் பரம்பரை அலங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் வடம் பிடித்து தொடங்கி வைத்தாா்.
இந்த விழாவில் மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் வி.காந்திராஜ், வெளிநாடுவாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் தென்னரசு எம்எல்ஏ-க்கள் தாஹிரா, சுகுமாா் மற்றும் உபயதாா்கள், திரளான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்று சாமி தரிசனம் செய்தனா்.

மேள தாளங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக மலை வலம் சென்று தோ் நிலை நிறுத்தப்பட்டது.விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்: வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா

திருக்குவளை தியாகராஜா் கோயில் தேரோட்டம்

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் பிரம்மோற்சவ ஆலோசனைக் கூட்டம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



