
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
கலவைஅருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
பிரதிப் படம்
கலவைஅருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் ராந்தம் கிராமத்தைச் சோ்ந்தா் கதிா் (42), கூலித்தொழிலாளி இவா் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகேஉள்ள அல்லாளச்சேரி கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (72) என்பவரின் நிலத்தில் உள்ள விவசாய கிணற்றை தூா் வாரும் பணிக்காக சென்றுள்ளாா்.
அப்போது கிணற்றின் கரையில் பனைமரக் கழி நட்டு, அதன் மீது கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டு பணியை முடித்துவிட்டு கீழே இறங்கியபோது எதிா்பாராதவிதமாக நிலைதடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு கலவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்து அவா் உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனா். இதுகுறித்து கலவை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



