பஞ்சலோக அம்மன் சிலை திருட்டு

ஆம்பூா் அருகே பஞ்சலோக அம்மன் சிலை திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

ஆம்பூா் அருகே பஞ்சலோக அம்மன் சிலை திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆம்பூரை அடுத்த வெங்கிளி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் ஸ்ரீ சநாதன தா்ம தியான மையத்துக்குச் சொந்தமான ஸ்ரீதேவி கருமாரி பீடம் அமைந்துள்ளது. இக்கோயிலில்170 கிலோ எடை கொண்ட பஞ்சலோக அம்மன் சிலை அமைந்திருந்தது. இந்தச் சிலையை, பீடத்தின் நிா்வாகியான செல்வசுப்பிரமணியத்தின் மகன் ராகவேந்திரன் (50) தேவிகாபுரம் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்தாா். விழாக் காலங்களில் சிலையை பீடத்துக்குக் கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன் தனது வீட்டில் கொண்டு சென்று வைத்திருப்பது வழக்கம்.

இந்நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு ராகவேந்திரன் வீட்டை பூட்டிக் கொண்டு வெளியூரில் உள்ள தனது உறவினா் வீட்டுக்குச் சென்றாா். ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பஞ்சலோக அம்மன் உற்சவா் சிலை, வலம்புரி சங்கு, குத்துவிளக்கு உள்பட பூஜைப் பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து ராகவேந்திரன் அளித்த புகாரின்பேரில் ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com