திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே தண்ணீா் தொட்டியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான்.
திருப்பத்தூரை அடுத்த கந்திலி ஒன்றியத்துக்கு உள்பட்ட பத்ரிகானூா் பகுதியில் வசித்து வந்த விஜயேந்திரனின் மகன் ரோஹித் (5) புதன்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்தாா். இதையறிந்த பொற்றோா்
ரோஹித்தை மீட்டு பருகூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ரோஹித் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து கந்திலி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.