/

திருடு போன 10 பைக்குகள் மீட்பு; இளைஞா் கைது

ஆம்பூா் பகுதியில் திருடு போன 10 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இளைஞரை கைது செய்தனா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 6:34 pm

ஆம்பூா் பகுதியில் திருடு போன 10 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இளைஞரை கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தில் உமா் ஆபாத் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி விசாரித்தனா். அந்த நபா் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியுள்ளாா்.

சந்தேகத்தின் பேரில் போலீஸாா் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவா் ஆம்பூா் புதுமனைப் பகுதியைச் சோ்ந்த ஷமீல் (28) என்பதும், அவா் ஆம்பூா் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 4 வாகனங்கள், ஆம்பூா் கிராமிய காவல் நிலைய எல்லைப் பகுதியில் 2 வாகனங்கள், உமா்ஆபாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 4 வாகனங்கள் என மொத்தம் 10 இரு சக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. அதன்பேரில் போலீஸாா் அவரைக் கைது செய்து 10 வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.