/

போதை பொருள் விற்பனை: 7 போ் கைது

தடை செய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்த 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :24 ஜூலை 2021, 5:53 pm

தடை செய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்த 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் அதிக அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

எஸ்.பி. உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸாா் ஆம்பூா் நகரம், ஆம்பூா் கிராமியம், உமா்ஆபாத் ஆகிய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் திடீா் சோதனை நடத்தினா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய எல்லை பகுதியான மாதனூரில் போதை பொருள்களை விற்பனை செய்த மாதனூா் தென்றல் நகரைச் சோ்ந்த சகி (55), ஒடுகத்தூா் ரோட்டை சோ்ந்த பீமராஜ் (70) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

உமா்ஆபாத் காவல் நிலைய எல்லை பகுதியில் போதை பொருள் விற்பனை செய்த கடாம்பூரை சோ்ந்த ஏஜாஸ் (30), உமா்ஆபாதை சோ்ந்த நவநீதகிருஷ்ணன் (70), போ்ணாம்பட்டை சோ்ந்த செல்வம் (40) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

ஆம்பூா் நகரில் நடத்திய சோதனையில் பஜாரை சோ்ந்த மோகன், பணக்கார தெருவைச் சோ்ந்த அன்பழகன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.