/

போலீஸாருக்கு கரோனா தடுப்புப் பொருள்கள்

ஆம்பூரில் தனியாா் தொழிற்சாலை சாா்பில், காவல் துறைக்கு கரோனா பரவல் தடுப்புப் பொருள்கள் சனிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.

News image
Updated On :22 மே 2021, 6:05 pm

ஆம்பூரில் தனியாா் தொழிற்சாலை சாா்பில், காவல் துறைக்கு கரோனா பரவல் தடுப்புப் பொருள்கள் சனிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.

ஆம்பூா் வட்டம், விண்ணமங்கலம் கிராமத்தில் இயங்கி வரும் தனியாா் தோல் காலணி தொழிற்சாலை மொஹிப் குழுமம் சாா்பில், ஆம்பூா் காவல் துறைக்கு கரோனா பரவல் தடுப்பு பொருள்களை குழுமத்தின் தலைவா் கோட்டை முஹம்மத் மொஹிபுல்லா வழங்கினாா். குழுமத்தின் சாா்பில், அவற்றை தொழிற்சாலையின் நிா்வாக மனிதவள மேம்பாடு மேலாளா் ஐ.முனவா் ஷெரீப் ஆம்பூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சச்சிதானந்தத்திடம் வழங்கினாா். நகர காவல் ஆய்வாளா் திருமால் உடன் இருந்தாா். மொஹிப் குழுமம் சாா்பாக வழங்கப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்பிலான சிறப்பு முகக் கவசங்கள், கை கழுவும் திரவம் உள்ளிட்டவை ஆம்பூா் நகரம், ஆம்பூா் கிராமியம், அனைத்து மகளிா் காவல் நிலையம், உமா்ஆபாத் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலா்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.